என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு
பிரபல நடிகை பாவனா ராமண்ணா திருமணம் செய்துக்கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவது குறித்து வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாவனா ராமண்ணா
தலு மொழியில் 1996ஆம் ஆண்டு வெளியான மாரிபலா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை பாவனா ராமண்ணா.
அதனை தொடர்ந்து 1999-ம் ஆண்டு தமிழில் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் நடித்திருந்தார்.
இவர் தமிழ், இந்திய கன்னடம் என பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது 40 வயதாகும் பாவனா ராமண்ணா திருமணம் செய்துகொள்ளாத நிலையில், கருத்தரிப்பு சிகிச்சை (IVF) மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் அவர் குறிப்பிடுகையில், “நான் தாயாவேன் என ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. இது ஒரு புதிய அத்தியாயம். நான் ஒரு தாயாகப் போகிறேன். நான் இப்போது ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறேன். இரட்டையர்களைப் பெற்றெடுக்கும் உணர்வு என்னை மகிழ்ச்சியால் நிரப்புகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“என்னுடைய குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் கலை, இசை, கலாச்சாரம் மற்றும் அன்பு நிறைந்த வீட்டில் வளர்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எனது 20 மற்றும் 30 வயதுகளில், தாய்மை என் மனதில் இல்லை. எனக்கு 40 வயதானபோது, அந்த ஆசை மறுக்க முடியாததாக இருந்தது. பல IVF கிளினிக்குகள் என்னை முற்றிலும் நிராகரித்தன" என பாவனா ராமண்ணா தெரிவித்துள்ளார்.
இதில் ஆச்சரியப்படும் விதமாக, பவானா முதல் முயற்சியிலேயே கருத்தரித்துள்ளார். தனது கர்ப்பத்தை ஜூலை 4, 2025 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து, தனது பேபி பம்பை காட்டும் இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களுயும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |