ICU-ல் சிரித்த முகத்துடன் இயக்குனர் பாரதிராஜா! வெளியானது தற்போதைய புகைப்படம்
இயக்குனர் பாரதிராஜா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குனர் பாரதிராஜா
தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் தான் பாரதிராஜா. இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் வலம்வந்து ரசிகர்களை கவர்ந்தவர்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் கிராமிய படங்களை இயங்கிய வெற்றி இயக்குனராகவும் வலம் வந்தார்.

1970ம் ஆண்டுகளில் கிராம வாழ்க்கையினை இயல்பாகவும், உணர்ச்சிவசப்படுத்தும் விதமாகவும் மாற்றியவர் ஆவார். இவர் இயக்கிய 16 வயதினிலே, மண்ணில் இருந்து மண்ணுக்கு, அலையோசை, முதல் மரியாதை, கருத்தம்மா போன்ற சினிமா இன்றும் அதிகமாக பேசப்படுகின்றது.
குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த இவருக்கு தற்போது 84வயதாகும் நிலையில், கடந்த வருடம் இவரது மகன் மனோஜ் குமார் மாரடைப்பினால் உயிரிழந்தார். அதன் பின்பு பாரதிராஜாவின் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் பாரதிராஜா
கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவினால் பாரதிராஜா சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதுடன் நுரையீரல் தொற்று இருப்பதாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்பொழுது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகியது. மேலும் அவரது முன்னேற்றம் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இன்று இவரது மற்றொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சிரித்த முகத்துடன் காணப்படுகின்றார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |