கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த பாரதி: ஆனால் அதில் ஒரு டுவிஸ்ட் இருக்கே
பரபரப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா, தொடரின் நாயகியாக நடித்து வந்த ரோஷினி ஹரிபிரியன் சீரியலில் இருந்து விலகினாலும் புது நாயகியாக களமிறங்கியுள்ள வினுஷா தேவியும் தன்னால் முடிந்தளவு நடிப்பில் அசத்தி வருகிறார்.
கடந்த வாரம் நடந்த எபிசோட்களில் விவாகரத்து கேட்டு பாரதி விண்ணப்பிக்க, கடைசியில் இருவரும் 6 மாதங்கள் சேர்ந்து வாழ வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
பாரதி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அஞ்சலியை யாரோ கடத்தி சென்று கடைசியில் அவருக்கு குழந்தையும் பிறக்கிறது.
அஞ்சலி, அகில், குழந்தை என மூவரும் மருத்துவமனையில் இருக்க, குடும்பமே பரிதவித்து நிற்கிறது, இறுதியில் மூவரும் நலம்பெற்று வீடு திரும்புகின்றனர்.
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளின் ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது, அதில் கண்ணம்மாவுடன் தான் சேர்ந்து வாழ முடிவெடுத்து விட்டதாக பாரதி தெரிவிக்கிறார்.
இதைக்கேட்டதும், மொத்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்க, ஆனால் தான் கண்ணம்மாவின் வீட்டுக்கு சென்று வசிக்கப் போவதாக கூறி பெட்டியின் கிளம்புகிறார் பாரதி.
எப்படியிருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் நிம்மதி என பெருமூச்சுவிடுகிறார் சௌந்தர்யா.
என்னதான் பாரதி முடிவெடுத்தாலும், கண்ணம்மாவை என்னவெல்லாம் தொந்தரவு செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!!!