இந்த ஒன்றை மட்டும் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா! இது எளிதாக கிடைக்கும் உணவு பொருளும் கூட
முருங்கை விதையில் ஏராளமான நன்மைகள் உள்ளன.
முருங்கை விதையை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
இரத்த சோகையை நீக்கி உடலை புத்துணர்ச்சியாக்கும். இதயத்தைப் பலப்படுத்தும். நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் பலத்தை கொடுக்கும்.
மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது.
அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும் முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை வியாதி குணமாகும்.
செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.
இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன.
முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்த சோகை நீங்கும்.
பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை முருங்கை விதைகள் சாப்பிடுவதால் குணமாகும்.