கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?
கொத்தமல்லி உணவின் நறுமணத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுகிறது. ஆம் இதில் பல நன்மைகள் நமக்கு தெரியாமல் ஒளிந்துள்ளது.
குறிப்பாக வைட்டமின் ஏ, சி மற்றும் கே அதில் அதிகமாக இருப்பதால் இயற்கை வைத்தியமாகவும் பயன்படுகிறது. இரவு முழுவதும் சுத்தமான தண்ணீரில் கொத்தமல்லியை ஊறவைத்து மறுநாள் குடித்தால் என்ன நன்மைகள் ஏற்படும் குறித்து பார்க்கலாம்.
நன்மைகள்:-
வைட்டமின் கே, சி மற்றும் ஏ இருப்பதால் முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது. அதோடு அவை முடியின் வேர்களின் ஆழத்திற்கு சென்று பாதித்த முடியினை சரி செய்யவும் உதவுகிறது.
கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கும்போது அதில் ஆன்டிஆக்ஸிடன்டின் தோன்றுகிறது. இதனால் வெளிப்புற தொற்று , கிருமி , பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைந்தால் அவற்றை எதிர்த்து போராடும் அளவிற்கு வலிமையை கொடுக்கிறது.
வைட்டமின் சியின் வளமான ஆதாரம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இரும்பு சத்து கொத்தமல்லியில் இருப்பதால் உங்கள் சருமம் பளபளப்பு தரும். அதோடு பருக்கள், சரும நிற மாற்றம் போன்ற சரும நன்மைகளை கொடுக்கும்.
கொத்தமல்லியில் இயற்கையாகவே செரிமான பிரச்சனையை தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையையும் குறைக்கிறது.