அரோராவுக்கு இப்படி ரசிகனா? வெளியே வந்த துஷார் செய்த வேலையால் அதிர்ச்சி
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியே வந்த துஷார் அரோராவுக்கு சார்பாக கொடி பிடித்த விடயம் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடும் விவாதங்களுக்கு மத்தியில் நான்கு வாரங்கள் நிறைவடைந்துள்ளன. பிரவீன் காந்தி, அப்சரா ஆதிரை, கலையரசன், துஷார் மற்றும் பிரவீன் ஆகியோர் இதுவரையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள் நுழைந்துள்ளனர்.
ரசிகர் மன்ற தலைவர் போல் மாறிய துஷார்
இந்த நிலையில், நான்காவது வாரமான டபுள் எவிக்ஷன் நடந்து பிரவீன் மற்றும் துஷார் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியே சென்ற துஷார் கொடுத்த பேட்டி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், “ அரோரா எனக்கு நெருங்கிய தோழி. பிக்பாஸ் வீட்டில் என்னிடம் கருத்துக்களையும் கேட்பதற்கு ஒரு ஆள் இருந்தது என்றால் அது அரோரா தான். அவர் தவறாக பேசினாலும் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கம்ருதீன் உடன் தற்போது இருப்பது எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

அதே போன்று நான் உள்ளே இருந்திருந்தாலும் விக்ரம் அண்ணாவுடன் தான் இருந்திருப்பேன். எனக்கு எந்தவிதமான பயமும் இல்லை. ஏதோ கூறுவதற்காக தான் என்னை அந்த திரைக்கு பின்னால் அழைத்தார். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. அது அவ்வளவு தான். அதற்காக நான் அவரை தவறாக சொல்லவில்லை..” என பேசினார்.
இந்த பேட்டி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அரோரா மீது துஷாருக்கு இவ்வளவு பாசமா என இணையவாசிகள் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |