“தேவயானி தகுதி என்ன உன் தகுதி என்ன”?தேவயானி கணவரை எச்சரித்த பயில்வான்
நடிகர் தேவயானியின் கணவர் ராஜகுமாரன் ஜெயிலர் திரைபடத்தை பற்றி தவறான கருத்துக்களை பேட்டியில் பேசியதற்கு பயில்வான் அவருக்கு கடின வார்த்தைகளால் பதில் கொடுத்துள்ளார்.
ராஜகுமாரன்
தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சமீபத்தில் பல யூடியூப் சேனலுக்கு ஜெயிலர் படத்தை பற்றி பேட்டி கொடுத்து வந்தார்.
அதில் அவர் பேசியது ”அண்மையில் அவர் அளித்த பேட்டியில், ஜெயிலர் படம் பார்த்தேன், அதில், ரத்தம், வன்முறை என படம் கொடூரமாக இருந்தது, இன்டர்வலிலேயே வெளியே வந்துடலாம்னு இருந்தது.

இதுல படம் 600 கோடி வசூல் பண்ணி இருக்குனு சொல்றீங்க, ப்ளூ பிலிம் எடுத்தா கூட நல்லா வசூல் பண்ணும், இதுல பார்ட் 2 வேற எடுக்குறாங்க” என விமர்சனத்துடன் பேசி இசி இருந்தார்.
இப்படி தேவயானியின் கணவர் பேசிய விடயம் இணையத்தில் பெரும் விவாதத்தை கொண்டு வந்தது. இவர் பேசியதற்கு பத்திரிக்கையாளர் பயில்வான் பதிலுக்கு பேசியுள்ளார்.

பயில்வான்
”அருமை அருமை தம்பி ராஜகுமாரன் எத்தனை வெற்றி திரைப்படங்களை கொடுத்து இருக்கீங்க, எத்தனை படங்களை இயக்கி இருக்கீங்க, எத்தனை தயாரிப்பாளர்களை வாழ வைத்தீங்க, ஜயோ எவ்வளவு பண்ணி இருக்கீங்க என.
இப்படி நக்கலாக சொல்லி விட்டு இது எதுவுமே நீ பண்ணல தானே அப்போ எதுக்கு இந்த மாதிரி நீங்க பேசுரீங்க நீ அப்போது இருந்து இப்ப வரைக்கு தேவயானி சம்பாதித்து வைத்ததில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்.
தேவயானி சம்பாதித்த பணத்தில் தான் உன்னுடைய ஊரில் பண்ணை வீடு கட்டி இருக்கீங்க பிள்ளைகளின் படிப்பு செலவை பார்த்து கொள்வது தேவயானி தான் இப்படி உழைக்கவே தெரியாம பொண்டாட்டி உழைப்பில் வாழும் நீ இதெல்லாம் பேசலாமா?

உன் முகத்தை நீ கண்ணாடியில பார்த்து இருக்கிறாயா தேவயானி கால் தூசுக்கு கூட நீ வரமாட்ட. நீ இப்படி ஜெயலர் திரைப்படத்தை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு?பெரிய ஆட்களை திட்டினால், பெரிய ஆளாகிவிடலாம் என நினைக்கிறாயா?
முதல் முறை நீ பேட்டியளித்த போதே, இது வேண்டாம் அடக்கி வாசி, இதற்கு மேல் சினிமாவில் யாரும் உங்களை அழைக்க மாட்டார்கள் என்றேன்.
இப்படி சர்ச்சையாக பேசினால் பெரிய ஆளாகி முடியாது. நான் சர்ச்சையாக பேசுவேன். ஆனால், அதற்கு எல்லாம் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டேன்.

மற்றவர்களை நீ குற்றவாளி என்று சொல்லுமுதல் நீ ஒரு குற்றவாளி அதை புரிந்து கொள். நான் உனக்கு கடைசியாக இந்த எச்சரிக்கை சொல்கிறேன்.
இதற்கு மேல் நீங்க யாரைப் பற்றி யாவது தவறாக பேசினீர்கள் என்றால், நாக்கை இழுத்து வைத்து அறுத்து விடுவேன், சினிமாவில் சம்பாதித்துவிட்டு, சினிமாக்காரனாக இருந்து கொண்டு இப்படி பேசுவது சரியில்லை என பயில்வான் தேவயானியின் கணவரை கடின வார்த்தைகள் உபயோகித்து பேசி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |