உலகிலேயே மிககுளிர்ச்சியான இடம் இதுவா? வியக்க வைத்த ரஷ்யாவின் யாகுட்ஸ்க் நகர் மக்களின் இயல்பு வாழ்க்கை!
குளிர்காலம் அல்லது பனிக்காலம் என்பது இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும்.
வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களிலும் இந்த குளிர்காலத்திற்குரிய காலநிலை காணப்படும்.
இதில், இந்தியாவை பொருத்த வரை வட மாநிலங்களில் தான் அதிக அளவில் குளிர் இருக்கும். பனிபொழிவு ஏற்படும். உலகில் பல இடங்களில் குளிர்ச்சியான இடங்களை கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் நாம் இப்போது தெரிந்துகொள்ளப்போகின்ற இடம் நடுநடுங்க வைக்கிறது. அவை, ரஷ்யாவில் உள்ள யக்குடிஸ்க் (Yakutsk) என்ற இடம் தான், இங்கு -71°C, -96°F அளவில் குளிர்ச்சியாக இருக்குமாம்.
இங்கு வசிக்கும் மக்கள் தொகை... 269486. சராசரி வெப்ப நிலை, மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் இந்த ஊரில் கண்ணாடி அணிந்து கொண்டு வெளியே செல்லமுடியாது. காரணம், அதுவும் விறைத்து பிறகு முகத்திலிருந்தே கழட்ட முடியாதாம்.
மேலும், இந்த ஊரில், ஒரு துணியை வெளியே காயவைத்தால், கூட அது உடனே ப்ளாஸ்டிக்போல் உறைந்துபோய்விடுகிறது. ஒரு வாழைப்பழம், ஆப்பிள் பழம் உறைந்து அவை சுத்தியாக ஆணி அடிக்கவே பயன்படும் அளவிற்கு குளிர்பனி இருக்கும்.
அங்கு வசிக்கும் மக்கள் உடலுக்குள் பல உடைகளை அணிந்து தான் வெளி வருகிறார்கள். இதை பிரபல யூடிப்பரான டிஸ்கவர் வித் செனட் (Discover With Cenet) என்பவர் அவர் சேனலில் விளக்குகிறார்.
இவரின் சேனலில், பலரும் அறிந்திடாத தனித்துவமான இடங்களுக்கு சென்றும் அங்கும் நடக்கும் குளிர்ச்சியான பகுதிகளை பற்றி கேட்டு அறிந்து விளக்குகிறார். மேலும், இந்த நகரத்தில் பெரும்பாலான மக்கள் சூடான் இயந்திரங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு பெண் ஒரு நிமிடம் அவள் கையுறைகளை அகற்ற உடனே ரத்தம் ஓட்டம் இல்லாமல் விறைந்துபோக ஆரம்பிக்கிறது.
கொதிக்கும் நீரை வெளியே எடுத்து ஊற்றினால் கூட உடனே அவை கரைந்துபோய்கிறது. அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பற்றி அப்படியே விவரித்து இருக்கிறார் செனட்.