கண்ணீர் விட்ட பாலா…. ஆரி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க போகும் கமல்! நடக்க போவது இது தான்?
பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 92 வது நாளை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அதேபோல் பாலாஜி மற்றும் ஆரி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
ரம்யாவிற்கும் ஆரிக்கும் இடையே கூட கருத்து வேறுபாடுகள் அதிகரித்தது. இந்நிலையில் பாச மழைக்கு நிகராக வன்முறைகள் நிறைந்த வாரமாக இந்த வாரம் இருந்தது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் ஆரியின் மீது இருந்த கோபத்தினால் பாலாஜி பேசிக்கொண்டிருக்கும்போதே தனது மைக்கை உடைத்தார். அதே போல தலையனையை தூக்கி கோபமாக வீசினார்.
இதை பார்த்த பலரும் பாலாஜிக்கு நிச்சயம் Redcard கொடுக்கப்படவேண்டும். போட்டியின் விதிமுறைகளை அவர் தொடர்ந்து மீறி வருகிறார் என்பது போல குற்றம்சாட்டினர். இன்றைய தினம் அப்படி நடக்கலாம் என்றும் பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
இன்று பாலாஜி கண்ணீர் விட்டு அழுவதையும் "எனக்கு அறிவுரை சொல்ல யாரும் இல்லை' என்பது போல கூறுவதையும், கமல் அதை ஏற்றுக் கொண்டதைப் போல சைகை காட்டுவதையும் பார்க்க முடிகிறது.
எனவே இப்படியே வாரவாரம் கோவமாக பேசுவதும் அதற்கு பின்பு மன்னிப்பு கேட்பது வழக்கமாகிவிட்டது, அவருக்கு Redcard கொடுக்கப்படவில்லை என்று பலரும் கமென்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்