பக்தி சூப்பர் சிங்கரில் பாட்டி ஆசையை நிறைவேற்றி பேத்தி- கண்ணீருடன் அவர் கூறிய செய்தி
பக்தி சூப்பர் சிங்கரில் அருமையாக பாடி நடுவர்களிடம் இருந்து பாராட்டு பெற்ற கோபிகா, அவருடைய வெற்றிக்கான காரணம் யார் என்பதனை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
பக்தி சூப்பர் சிங்கர்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் காயத்திரி டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்து, பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 என ஆரம்பமாகும் என எதிர்பார்த்த வேளையில் பக்தி பாடல்கள் அடங்கிய பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
மேடையில் அழுத இளம் பெண் என்ன காரணம்?
இந்த நிலையில், பக்தி பாடல்கள் வாயிலாக தங்களின் திறமைகளை போட்டியாளர்கள் காட்டி வருகிறார்கள். அதில், சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னரான அருணாவின் தங்கை கலந்து கொண்டுள்ளார்.
இந்த வாரம் அம்மன் பக்தி பாடல்கள் சுற்று நடைபெறவுள்ளது. அதில் போட்டியாளர்கள் தங்களின் திறமை வெளிகாட்டி வருகிறார்கள். அப்போது சில போட்டியாளர்கள் பாடிய பாடல்களை கண்டு நடுவர்களே வியந்து எழுந்து நின்று வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் கோபிகா என்ற பெண் அருமையாக பாடி நடுவர்களின் பாராட்டுக்களை பெற்று, “Golden performance" வாங்கியுள்ளார்.
அத்துடன், நான் இந்த நிலைமைக்கு வர வேண்டும் என்று என்னுடைய பாட்டி தான் ஆசைப்பட்டார் எனக் கூறியுள்ளார். கவலையடைந்த நடுவர், “ பாட்டி இல்லாவிட்டால் என்ன தாத்தா இருக்கிறார் தானே..” என சமாதானம் செய்துள்ளார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |