பக்தி சூப்பர் சிங்கரில் அனல் பறக்கும் பாடல்.. அரங்கத்தை அதிர வைத்த குரல் யாருடையது?
பக்தி சூப்பர் சிங்கரில் அனல் பறக்கும் பாடலை பாடி அரங்கத்தை அதிர வைத்த போட்டியாளருக்கு நடுவர்கள் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பக்தி சூப்பர் சிங்கர்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் காயத்திரி டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்து, பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 என ஆரம்பமாகும் என எதிர்பார்த்த வேளையில் பக்தி பாடல்கள் அடங்கிய பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
கணவரை மேடையில் வைத்து கலாய்த்த பெண்
இந்த நிலையில், பக்தி பாடல்கள் வாயிலாக தங்களின் திறமைகளை போட்டியாளர்கள் காட்டி வருகிறார்கள். அதில், சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னரான அருணாவின் தங்கை கலந்து கொண்டுள்ளார்.
அருணா, சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் பக்தி பாடல்கள் சுற்றில் சிறப்பாக பாடியிருப்பார். அவரை போன்று திறமைக் கொண்ட தங்கைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் அம்மன் பக்தி பாடல்கள் சுற்று நடைபெறவுள்ளது. அதில் போட்டியாளர்கள் தங்களின் திறமை வெளிகாட்டி வருகிறார்கள். அப்போது சில போட்டியாளர்கள் பாடிய பாடல்களை கண்டு நடுவர்களே வியந்து எழுந்து நின்று வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
சிலரின் குரலில் அம்மன் இருப்பதாகவும் கூறியுள்ளனர். போட்டியாளர்களின் திறமையை கண்டு நடுவர்களுக்கு ஒரு சில வாய்ப்புக்களையும், ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகிறார்கள்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |