டைட்டில் வின்னர் அருணாவை மீண்டும் களமிறக்கிய சூப்பர் சிங்கர்- விறுவிறுப்பான தேர்வுகள்- தெரிவானாரா?
சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டு 50 லட்சத்தை தட்டித்தூக்கிய அருணா, மீண்டும் பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
சூப்பர் சிங்கர்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இதில் காயத்திரி டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார். அடுத்து, பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 என ஆரம்பமாகும் என எதிர்பார்த்த வேளையில் பக்தி பாடல்கள் அடங்கிய பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
டைட்டில் வின்னர் அருணாவின் மற்றுமொரு முயற்சி
இந்த நிலையில், பக்தி பாடல்கள் வாயிலாக தங்களின் திறமைகளை போட்டியாளர்கள் காட்டி வருகிறார்கள். அதில், சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னரான அருணா கலந்து கொண்டுள்ளார்.
இவர் சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் பக்தி பாடல்கள் சுற்றில் சிறப்பாக பாடியிருப்பார்.
இதனை தொடர்ந்து பக்தி பாடல்களுக்கு என தனி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நிச்சயம் தெரிவு செய்யப்படுவார் என அவரின் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னர் என்பதால் போட்டிகள் சற்று கடுமையாகவும், போட்டியாளர்கள் இன்னும் உழைக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |