பசியால் கதறிய 22 நாள் குழந்தை: கண்டுகொள்ளாமல் கணவன் மனைவி செய்த காரியம்! பரிதாபமாக உயிரிழப்பு
பசியால் கதறிக்கொண்டிருந்த குழந்தையை கண்டுகொள்ளாமல் பெற்றோர்கள் சண்டையிட்டுள்ளதால், குழந்தை இறந்துள்ள சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் சைதாபாத் பகுதியில் ஒரு இளம் கணவன் மனைவி தங்களின் புதிதாக பிறந்த 22 நாள் குழந்தையோடு வசித்து வந்துள்ளனர்.
குறித்த தம்பதிகள் அடிக்கடி சண்டையிடுவதை வழக்க வைத்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை பசியால் அழுதுகொண்டிருந்த தருணத்தில் இருவரும் சண்டையிட்டுள்ளனர்.
இநநிலையில் கணவர் தன்னுடையை மனைவியை குழந்தைக்கு பால் கொடுக்கும்படி திட்டியநிலையில், கோபத்தில் குழந்தையை தாய் இறுக்கமாக பிடித்ததால், மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்துள்ளது.
ஆனால் அந்த பெண் வேண்டுமென்றே அப்படி செய்யாமல் கணவனிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்காக குழந்தையை இறுக்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.