அடுத்தடுத்து பகிர் கிளப்பும் பாபா வாங்கா கணிப்புகள்.. மீண்டும் வைரஸ் தொற்றா?
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் பாபா வாங்காவின் கணிப்புக்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
அவரது கணிப்புகளில் பல உண்மையாகியுள்ளன. இதனால் மக்கள் பாபா வாங்காவின் கணிப்பக்களில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள். இதுவரை அவருடைய பல கணிப்புகள் உண்மையாகி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பல்கேரியாவை பிறப்பிடமாக கொண்ட பாபா வங்கா, தன்னுடைய 12 வயதில் பார்வையை இழந்தார். பார்வை இழந்த பின்னரும் எதிர்காலத்தை கச்சிதமாக கணிக்கும் சக்தி இவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
அவர் இறப்பதற்கு முன்னர் எதிர்காலத்தில் நடக்கப்போகும் அழிவுகள் பற்றி கூறியுள்ளார்.
இதன்படி, தற்போது புதிய வைரஸ் தொற்று தொடர்பான கணிப்பொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
வைரஸ் தொற்று
பாபா வாங்காவின் மற்றொரு கணிப்பு வைரலாகி வருகிறது.
அதாவது, போர் ஒரு வழியாக சமாதானமாக செல்லும் வேளையில், ஒரு ஆபத்தான வைரஸ் தாக்கம் ஏற்படும் என கணிப்பு வெளியாகியுள்ளது. அதுவும் குறித்த வைரஸ் இன்னும் சில ஆண்டுகளில் வேகமாக பரவி ஆபத்தான ஒரு நிலையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் மக்களின் வயதை வேகமாக அதிகரித்து இளைஞர்களை விரைவாக வயதான தோற்றத்திற்கு கொண்டு செல்லும். அத்துடன் பாபா வாங்கா கணிப்பின்படி, எதிர்வரும் 2084 ஆம் ஆண்டில் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு, இயற்கை புத்துயிர் பெறத் தொடங்கும்.
2088 ஆம் ஆண்டில் ஒரு வைரஸ் மக்களிடையே பரவத் தொடங்கி, மக்கள் வேகமாக வயதாகும். இளமையிலேயே முதுமை நோய்களால் அவதிப்படுவார்கள்.
இதனை தொடர்ந்து 2097 ஆம் ஆண்டில் இந்த வைரஸ் வேரோடு அழிக்கப்பட்டு, 2111 ஆம் ஆண்டிற்குள் மனிதர்கள் ரோபோக்களாக மாறி விடுவார்கள். ரோபோக்கள் போன்று வேலை செய்வார்கள். அதிலும் குறிப்பாக 5079 ஆம் ஆண்டில் உலகம் முடிவுக்கு வரும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).