5 வயதிலேயே பெற்றோரை இழந்துட்டேன்... மன உருக்கத்துடன் பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!
விஜய் டிவி தொலைக்காட்சி சீரியல்களில் ட்ரெண்டாங்கில் இருக்கும் சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
இத்தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.
இந்த தொடரின் கதையானது குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை.
கடந்த இரண்டு வாரத்தில் மட்டுமே இந்த சீரியலின் டிஆர்பி எகிறியுள்ளது. அதற்கு காரணம் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பதும், கோபி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது தான்.
பெற்றோரை இழந்தேன்
இப்படி இந்த சீரியலை பற்று ஒரு பக்கம் ஹைலைட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் கோபி என்கிற சதீஷ் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சந்தித்த துயரம் பற்றி கூறியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், தான் 5 வயதில் தம்பியை இழந்தேன், ஒரு விபத்தில் பெற்றோரையும் இழந்துள்ளேன். ஒரு அனாதையாகவே சென்னைக்கு வந்தேன். அப்போது என்னிடம் இரண்டு சட்டை மற்றும் இரண்டு ட்ரவுசர் தான் இருந்தது.
எனது அத்தை வீட்டில் தான் வளர்ந்தேன். எனக்கு தமிழ் சொல்லி கொடுத்து வாழ்க்கை கொடுத்து வருமானம் கொட்டுத்தது என அனைத்தும் தமிழன் தான்.
தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல அது ஒரு கலாச்சாரம், மதம், ஒரு சக்தி, வாழ்க தமிழ் என உணர்ச்சிபொங்க பேசியுள்ளார் கோபி என்கிற சதீஷ்.
5 வயதில் பெற்றோரை இழந்தேன்.. பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ்#Baakiyalakshmi #Sathish #Gopi pic.twitter.com/VeYAhz6qk5
— Parthiban A (@ParthibanAPN) July 14, 2022