Baakiyalakshmi: மீண்டும் சுதாகரால் பாக்கியாவிற்கு வந்த சிக்கல்
பாக்கியலட்சுமி சீரியலில் சுதாகர் மற்றொரு நபர் மூலமாக பாக்கியாவிற்கு தொந்தரவு கொடுத்து வருகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் குடும்பத்தை காப்பாற்றி வருவது கதையாகும்.
கோபி தற்போது பாக்கியாவுடன் இருந்து வரும் நிலையில், இனியாவிற்கு செய்து வைத்துள்ள திருமணம் தற்போது பிரச்சனையாகியுள்ளது.
மகனின் போதை பழக்கம் இனியாவிற்கு தெரிந்த நிலையில், சுதாகர் வீட்டைவிட்டு இனியாவும் பாக்கியா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் சுதாகர் தனது சுயரூபத்தை மீண்டும் காட்ட ஆரம்பித்துள்ளார். அதாவது மற்றொரு நபரை அனுப்பி பாக்கியாவின் ஹோட்டலுக்கு சிக்கலை ஏற்படுத்த இருந்த நிலையில், கடைசியில் பாக்கியா அதிலிருந்து தப்பித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |