பாக்கியாவிற்கு வரும் அடுத்த ஆபத்து.. மீண்டு வருவாரா?
பாக்கியாவிற்கு சீரியலில் அடுத்த ஆபத்து வருவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.
இதற்கிடையே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண், பாக்கியாவின் தோழியாகவும் கதை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையும் விவாகரத்து ஆன நிலையில், கோபி பாக்கியா வீட்டில் இருந்து வருகின்றார். இவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் பாக்கியாவும் தனது தொழிலில் முன்னேறிச் செல்கின்றார்.
இதனிடையே இனியா- ஆகாஷ் காதல் கோபிக்கு தெரியவந்துள்ளது. உடனே வீட்டில் உள்ள அனைவரிடமும் அம்பலப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் ஆகாஷ் வீட்டிற்குச் சென்று அவரை அடுத்து, மிரட்டி விட்டு வந்துள்ளார்.
இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளை கோபி செய்வதால் வீட்டிலுள்ள அணைவரும் வெறுக்க ஆரம்பித்து விட்டனர்.
பாக்கியாவிற்கு வரும் ஆபத்து
இந்த நிலையில் ஈஸ்வரியுடன் வீட்டை விட்டு வெளியில் சென்று விடலாம் என்ற முடிவுக்கு கோபி வந்து விட்டார்.
இது ஒரு பக்கம் இருக்கையில் இனியாவும், எழிலும் சென்று ஆகாஷை வீட்டில் பார்த்து விட்டு வந்துள்ளனர். இதனால் ஆகாஷின் அப்பா, பாக்கியா வீட்டில் மீண்டும் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.
எழிலின் செயலால் குடும்பத்தினர் பெறும் கடுப்பில் இருக்கிறார்கள். இதனை அறியாத பாக்கியா ஹோட்டலில் அவருடைய வேலைகளை பார்த்து கொண்டிருக்கும் பொழுது, அவருடைய ஹோட்டலை வாங்கிக் கொள்வதாக ஒருவர் உள்ளே வருகிறார்.
பாக்கியாவிற்கு ஹோட்டலை கொடுக்க விருப்பம் இல்லை. ஆனாலும் அவர்கள் மிகவும் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |