Baakiyalakshmi: அம்மாவின் நிலையால் அதிர்ச்சியடைந்த இனியா! மாமனாரை வறுத்தெடுத்த சம்பவம்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தனது பெயரில் புதிய ஹோட்டல் ஆரம்பித்துள்ள நிலையில், ஹோட்டல் குறித்த உண்மை இனியாவிற்கு தெரிந்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் கதையாக சென்றது.
எதுவும் அறியாத பெண்ணாக இருந்த பாக்கியா தற்போது ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்து வந்த நிலையில், இவருக்கு இடையூறாக சுதாகர் களமிறங்கி ஹோட்டலை அபகரித்துள்ளார்.
ஆனால் இதில் பாக்கியா சோர்ந்து போகாமல் மீண்டும் புதிய ஹோட்டல் ஒன்றினை தொடங்கியுள்ளார். பாக்கியாவின் புதிய மெஸ்ஸை அவதானித்த இனியா உண்மையை அறிந்துள்ளார்.
இதனை தனது மாமனாரிடம் நேரடியாக இனியா கேட்டுள்ளார். உடனே சுதாகர் எதுவும் பேச முடியாமல் அமைதியாக தவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |