Baakiyalakshmi: கொலைபழியை ஏற்றுக்கொண்ட கோபி.... சிறையில் அரங்கேறும் சித்ரவதை
பாக்கியலட்சுமி சீரியலின் இனியா செய்த கொலைக்காக கோபி பழியை ஏற்றுக்கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்..
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் குடும்பத்தை நடத்தி வருகின்றார்.
கோபி பாக்கியாவுடன் இருந்துவரும் நிலையில், தற்போது இனியா தனது கணவர் நித்திஷை கொலை செய்வது போன்று காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
தற்போது கடைசி அத்தியாயத்தை நோக்கிச் செல்லும் இந்த சீரியலில் மகள் செய்த கொலைக்கு, கோபி பொறுப்பெடுத்து சிறைக்கு சென்றுள்ளார்.
காவல்நிலையத்தில் கோபி போலிசாரால் அடித்து சித்ரவதை செய்யப்படுகின்றார். நித்திஷ் இறந்தது எதனால் என்ற உண்மை இனி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
