Baakiyalakshmi: பாக்கியாவின் புதிய ஹோட்டலுக்கு மீண்டும் வந்த சிக்கல்! எப்படி தப்பிக்க போகிறார்?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா புதிய ஹோட்டல் தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் கதையாக சென்றது.
எதுவும் அறியாத பெண்ணாக இருந்த பாக்கியா தற்போது ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்து வந்த நிலையில், இவருக்கு இடையூறாக சுதாகர் களமிறங்கி ஹோட்டலை அபகரித்துள்ளார்.
ஆனால் இதில் பாக்கியா சோர்ந்து போகாமல் மீண்டும் புதிய ஹோட்டல் ஒன்றினை தொடங்கிய நிலையில், இதற்கும் பிரச்சனை செய்வதற்கு ரவுடி ஒருவர் வந்துள்ளார்.
வெளியே ரவுடியின் தொந்தரவு ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டில் மாமியாரின் தொந்தரவும் ஏற்பட்டுள்ளது. பாக்கியா இதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவார்? என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |