எச்சரிக்கை...! மீந்துபோன உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கின்றீர்களா? விஷமாகும் அதிர்ச்சி
குளிர்சாதன பெட்டிகள் வந்த காலம் முதலே உணவுகளை அதில் நீண்ட நாள் கெடாமல் வைத்துக்கொள்ளும் முறைக்காகவே அதிகமாக பயன்பாட்டில் உள்ளது.
பல ஸ்டார் ஹோட்டல்களில் இதற்காக ஒரு குளிர்சாதன அறையையே வைத்திருப்பதை பார்க்கலாம்.
ஆனால் நாம் இப்படி குளிர்சாதன பெட்டியில் உணவை சேமித்து வைக்கலாமா? அதனால் உடலுக்கு கேடு எதுவும் ஏற்படாதா என்கிற கேள்வி பலருக்கு இருந்து வருகிறது.
மேலும் அப்படி சேமித்து வைப்பதாய் இருந்தால் எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம் என்றும் அவர்கள் யோசிக்கின்றனர். எனவே அதை பற்றிதான் இப்போது நாம் விரிவாக பார்க்க போகிறோம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
மருத்துவர் ஒருவர் இதுகுறித்து கூறும்போது ஒரு உணவை தயாரித்து 24 மணி நேரத்திற்கு பின்பாக உண்ணும்போது அது உடலில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சில உணவுகளை நமது முன்னோர்கள் மிகவும் எளிதாக குளிர்சாதன பெட்டிகள் இல்லாமலே பதப்படுத்தி இருப்பார்கள், ஊறுகாய், கருவாடு போன்ற உணவுகள் அவற்றில் அடங்கும்.
ஆனால் அவை இப்போது குளிர்சாதன பெட்டியில் சேமிக்கும் உணவின் அளவிற்கு உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
சமைத்த உணவுகள்
சமைத்த பிறகு நாம் நமது உணவை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கிறோம். ஆனால் அந்த உணவுகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.
இதனால் அந்த உணவுகளில் நோய்க்கிருமிகள் அதிகரிக்கின்றன, பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் அவற்றில் வளர்கின்றன.
எனவே ஒவ்வொரு உணவையும் பதப்படுத்த சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை அறியாமல் நாம் உணவுகளை பதப்படுத்தும்போது அது நமக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
சமைத்த உணவுகள்
இறைச்சி, கடல் உணவு மற்றும் சாதம் போன்ற உணவுகளில் பாக்டீரியாக்கள் அதிகமாக உற்பத்தி ஆகின்றன. எனவே அதிகப்பட்சம் குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவுகளை மீண்டும் பயன்படுத்தும்போது அவற்றை சுட வைத்து பயன்படுத்தலாம். இதனால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் இறந்துவிடும்.
ஆனால் இந்த நடைமுறையை பின்பற்றுவதிலும் சில சிக்கல்கள் உள்ளன.
அதிகமாக உணவுகளை மீண்டும் மீண்டும் சமைக்கும்போது அந்த உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிகின்றன. இதனால் நாம் ஆரோக்கியமான உணவுகளை பதப்படுத்தி உண்டாலும் கூட நமக்கு அதில் இருந்து எந்த வகையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது.
விஷமாக மாறும்
எப்போதும் புதிய உணவுகளே அதிக ஆரோக்கியம் நிறைந்தவையாக உள்ளன. எனவேதான் மக்கள் எப்போதும் புதிதான காய்கறிகள், உயிர் மீன்கள் போன்றவற்றையே அதிகமாக விரும்புகின்றனர். ஏனெனில் அவை அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதற்கு மாறானவை. மேலும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் உணவுகள் ஆரோக்கியம் இல்லாதவை. சில நேரங்களில் அவை உடலுக்கு விஷமாகும் அபாயமும் உள்ளது.