சிறையில் இருந்து தந்தைக்கு வீடியோ கோலில் பேசிய ஆர்யான்! சோகத்தில் கண்ணீர் சிந்திய ஷாருக்கான்
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யானை வெளியில் கொண்டு வர ஷாருக்கான் பல வகைகளிலும் முயற்சி செய்து வருகின்றார்.
எனினும், மும்பை விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து விட்டது. ஆர்யானின் காவல் அக்டோபர் 20 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யானுக்கு 10 நிமிடங்கள் வீடியோ காலில் பெற்றோருடன் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் சிறையில் உள்ள கைதிகள் வாரத்திற்கு இரண்டு முறை குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச ஐகோர்ட் அனுமதி அளித்திருந்தது.
மற்ற கைதிகளை போல் ஆர்யானுக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே பெற்றோருடன் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீடியோ காலில் தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் கவுரியிடம் ஆர்யான் கண்கலங்கி பேசி உள்ளார்.
மகனை பார்த்து ஷாருக்கானும் கண்கலங்கியதாக கூறப்படுகிறது. சிறை அதிகாரிகளின் முன்னிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.