சீனாவில் பிரபலமாகியுள்ள ”Are you dead?" செயலி! என்ன காரணம்னு தெரியுமா?
சீனாவில் பிரபலமாகியுள்ள Are you dead செயலி (app) குறித்த செய்திகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.
தற்காலத்தில் அறிவியல் வளர்ச்சியானது விண்ணை முட்டும் அளவுக்கு உச்சத்தை தொட்டிருந்தாலும், உறவுகளுக்கிடையிலான நெருக்கத்தை அது அதிகரித்திருக்கின்றதா என்பது கேள்வி குறியே.

பெரும்பாலாக முதியவர்கள் தற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக தனிமைப்படுத்தப் படுகின்றார்கள். அப்படிப்பட்ட முதியவர்களும், தனிமையில் வசிப்பவர்களும் தாம் இறந்து போனால் அதை யார் அறிவார்கள்?" என்ற அச்சத்தை எதிர்கொள்கிறார்கள் என்றால் மிகையாகாது.
குறிப்பாக, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் "தனிமை மரணங்கள்" (Lonely Deaths) தற்காலத்தை பொருத்தமட்டில் பெரும் சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இந்தச் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், சீனாவின் செங்சோவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இணைந்து "சி-லே-மா" (Si Le Ma - Are you dead?) என்ற வினோதமான செயலியை உருவாக்கியுள்ளனர்.
நீங்கள் இறந்துவிட்டீர்களா? என்று நேரடியாக கேள்வி எழுப்பும் இந்தப் பெயரைக் கொண்ட செயலி, 2026ஆம் ஆண்டில் சீனாவின் கட்டணச் செயலிகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
அதே நேரம், அந்நாட்டு இணையதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆப்பை டவுன்லோடு செய்யும் பயனர்கள், தங்களுக்கு நெருக்கமான ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை 'அவசரத் தொடர்பு' (Emergency Contact) எண்ணாகப் பதிய வேண்டும்.பயனர் தினமும் இந்தச் செயலிக்குள் சென்று, தான் நலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஒருவேளை, பயனர் தொடர்ந்து இரண்டு நாள்களுக்குச் செயலிக்குள் வராமல் இருந்தால், அவர் உயிருடன் இருக்கிறாரா? என்பதைச் சரிபார்க்கும்படி அந்த அவசரத் தொடர்பு நபருக்குச் செயலி தானாகவே மின்னஞ்சல் அனுப்பிவிடுமாம் குறித்த செயலி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.