ஆன்லைனில் ஆப்பிள் பழம் ஆர்டர் கொடுத்த இளம்பெண்... ஆனால் வந்தது என்னனு தெரியுமா? நம்பமுடியாத அதிசயம்
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் மூலம் ஆர்டர் செய்து வாங்குவதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சில தருணங்களில் நாம் ஆர்டர் கொடுத்த பொருள் வராமல் வேறொரு பொருள் வருவதுடன் அது பெரும் செய்தியாகவும் மாறுகின்றது.
இங்கும் ஆப்பிள் பழங்களை நபர் ஒருவர் ஆர்டர் செய்திருந்த நிலையில், தனக்கு கிடைத்த பையைத் திறந்து பார்த்தவருக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
லண்டன் அருகேயுள்ள ட்விக்கன்ஹாம் (Twickenham) என்னும் பகுதியிலுள்ள டெஸ்கோ (Tesco) பல்பொருள் அங்காடியில் ஆப்பிள் பழங்களை நிக் ஜேம்ஸ் (Nick James) என்பவர் ஆர்டர் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனக்கு கிடைத்த ஆப்பிள் பையைப் பெற்றுக் கொண்ட நிக் ஜேம்ஸ், அதனைத் திறந்து பார்த்துள்ளார். அதில், தான் ஆர்டர் செய்த ஆப்பிள் பழங்கள் மட்டுமில்லாமல், கூடவே மிகப்பெரிய பரிசு ஒன்றும் இருந்துள்ளது. புதிய வகை ஆப்பிள் ஐ போன் ஒன்று, அந்த பைக்குள் இருந்துள்ளது.
இதனைக் கண்டு திக்கு முக்காடிப் போன ஜேம்ஸ், முதலில் அந்த போன் தவறுதலாக தனக்குக் கிடைத்தது என நினைத்துள்ளார். ஆனால், அந்த போன் தவறுதலாக ஒன்றும் நிக் ஜேம்ஸிடம் வந்து சேரவில்லை.
டெஸ்கோ நிறுவனம், கடந்த சில தினங்களாக, தனது நிறுவனத்தில் இருந்து பொருட்களை வாங்கும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையார்கள் சிலருக்கு, ஆப்பிள் ஐ போன், ஏர்போட்கள் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கி வருகிறது. இதில், நிக் ஜேம்ஸ் வாங்கிய ஆப்பிள் பழத்திற்கும் அதிர்ஷ்ட பரிசு காத்திருந்துள்ளது.
தனக்கு ஐ போன் கிடைத்தது பற்றி ஆச்சரியத்துடன் கூறிய ஜேம்ஸ், 'எனக்கு ஏதோ ஆச்சர்யம் காத்திருக்கிறது என சொன்னதும், ஏதேனும் சாதாரண பரிசு இருக்கப்போகிறது என நான் முதலில் நினைத்தேன். ஆனால், அதில் ஐ போன் இருப்பதைக் கண்டு சற்று அதிர்ச்சியடைந்தேன்' என நிக் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.


