அனிதா குப்புசாமியின் காணாமல் போன மகளா இது? அச்சுஅசல் கலர் ஜெராக்ஸாக இருக்கும் புகைப்படம்
பாடகியான அனிதா குப்புசாமி மகளுடன் எடுத்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அவரைப்போன்றே இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
பாடகர்களான புஷ்பவன குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி இவர்கள் நாட்டுப் புற பாடல்கள் மூலம் மக்களை அதிகமாக கவர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். மருத்துவராக இருக்கும் இவர்களின் மூத்த மகள் கடந்த ஆண்டில் காணாமல் போனது பயங்கர சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது.
குடும்பத்தில் இரண்டு மகள்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் சென்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தான் எங்கும் காணாமல் போகவில்லை என்று தனது இன்ஸ்டாகிராமில் காணொளி வெளியிட்டார்.
அதுமட்டுமின்றி படிக்கும் குழந்தைகளை தனது வீட்டில் வேலை செய்ய வைத்ததுடன், அவர்களைக் கொடுமைப்படுத்துவதாகவும் இவர்கள் மீது புகார் எழுந்துவந்தது.
இவ்வாறு அடுத்தடுத்து பல சர்ச்சைகள் நிகழ்ந்த நிலையில், காணாமல் போன மகள் பல்லவியுடன் அனிதா எடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.