ஆனந்த் அம்பானி பிறந்தநாளை முன்னிட்டு யானைகளுக்கு 3000kg பழ விருந்து!
முகேஷ் அம்பானியின், இளைய மகன், ஆனந்த் அம்பானியின் பிறந்த நாளை முன்னிட்டு, கொண்டாடத்தை ஆரம்பிக்கும் விதமாக யானைகளுக்கு 3 ஆயிரம் கிலோவுக்கு பழ விருந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடம் வகிப்பவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி.இவருடைய இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கு அறிமுகமே தேவையில்லை.

ஆனந் அம்பானிக்கு விலங்குகள் பராமரிப்பில் ஆர்வம் ஆதிகம். இவர் குஜராத் மாநிலத்தில் வந்தாரா என்ற பெயரில் விலங்குகள் நல காப்பகத்தை வைத்து நடத்தி வருகிறார்.
சமீபத்தில் வந்தாராவை இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாற்றியதற்காக தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்திருந்தார்.

யானைகளுக்கு பழ விருந்து
ஆனந்த் அம்பானி நாளை தனது 31 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு நல உதவிளும் விருந்து உபசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் விலங்குகள் நலன் மற்றும் யானைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் ஆனந்த் அம்பானிக்கு இருக்கும் ஈடுபாட்டைக் கௌரவிக்கும் வகையில் ஜெய்ப்பூர் அருகிலுள்ள ஹாதி கான் பகுதியில் ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, யானைகளுக்கு 3 ஆயிரம் கிலோ பழ விருந்து வைக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |