வெளிநாட்டில் ஆல்யா-சஞ்சீவ் ஜோடி பார்த்த வேலையை பாருங்க... வைரலாகும் காணொளி!
சீரியல் நடிகை ஆல்யா மானசா இரண்டு குழந்தைகளுக்கு தயான பின்னரும் தன் காதல் கணவருடன் வெளிநாட்டில் ஜாலியாக என்ஜாய் செய்யும் காணொளியை தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த காணொளியானது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஆல்யா-சஞ்சீவ்
ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தங்களது தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.

சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

இதற்கிடையில், ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக கிளியோபட்ரா என்ற ஆல்பம் பாடலில் நடித்து இருந்தார்கள் அது அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆல்யா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும், பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகின்றார். இந்த தொடரில் இசை என்ற கதாப்பாத்திரத்தில் காது கேளாத பெண்ணகாக நடித்துவருகின்றார்.

இந்நிலையில் தற்போது தனது காதல் கணவர் சஞ்சீவ்வுடன் வெளிநாட்டில் ஜாலியாக சுற்றித்திரியும் காணொளியை வெளியிட்டு ரசிர்களை குஷியாக்கியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |