குழந்தை பிறந்த போது கண்கலங்கிய ஆல்யா... மகிழ்ச்சி தருணத்தின் காணொளி இதோ
பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்த ஆல்யா மற்றும் சஞ்சீவ் இந்த சீரியலில் நடித்த போதே காதல்வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஏராளமான ரசிகர்களின் பட்டாளத்தைக் கொண்ட இவர்களில் ஆல்யா ராஜா ராணி சீசன் 2 லும், சஞ்சீவ் காற்றி மொழி சீரியலிலும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வருடம் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது மகளுக்கு அய்லா என்று பெயர் வைத்துள்ளனர்.
நடிகை ஆல்யா மானசா குழந்தையின் அழகான புகைப்படம் மற்றும் போட்டோக்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அதிலும் பார்க்க அச்சு அசலாக ஆல்யா மானசா போலவே குழந்தையும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் குழந்தையின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர். இந்நிலையில் மகள் பிறந்த பொழுது முதன் முறையாக தனது கைகளில் வாங்கிய சஞ்ஜீவின் எமோஷனல் தருணங்களை வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.
இதுவரை யாரும் பார்த்திராத இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.