அஜித்தை காணொளி எடுத்து சர்ச்சையில் சிக்கிய பெண்.. அம்பலமாகிய அடுத்தடுத்து உண்மை! வேதனையில் அஜித்
சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வந்த அஜித்தை காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்ட பெண்ணின் உண்மையான சுயரூபம் தற்போது வெளியாகியுள்ளது.
சினிமா கலை இயக்குனர் ஜலாலுதீனின் மகள் பர்சானா(26). இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அஜித் மற்றும் அவரது மனைவி மருத்துவமனைக்கு வந்த போது பர்சானா காணொளி எடுத்து வெளியிட்டுள்ளார். இதனால் குறித்த மருத்துவமனை பர்சானாவை பணியிடை நீக்கம் செய்ததையடுத்து, பெப்ஸி மூலம் கடிதம் ஒன்றினைக் கொடுத்து தனக்கு வேலை வழங்க வேண்டும் என்று அஜித்தின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
குறித்த கடிதத்தில், தானும் கணவரும் வேலையில்லாமல் இருப்பதால், தனது பிள்ளை படிக்கமுடியாமல் வீட்டில் இருந்து வருகின்றது. மற்ற குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடந்துவருவதாகவும், தனது குழந்தையின் படிப்பு செலவிற்கு உதவி செய்யும்படி கேட்டுள்ளார்.
பெண் குழந்தையின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்று நினைத்த அஜீத், அக்குழந்தையின் ஒரு ஆண்டு பள்ளிக்கட்டணத்தினை கட்டுவதற்கு கூறியுள்ளார். குறித்த பெண்ணின் குழந்தை படிக்கும் பள்ளி பெரிய பள்ளி என்றும் கட்டணம் அதிகம் என்றாலும் அஜீத் பெருந்தன்மையுடன் இவ்வாறு உதவி செய்யுமாறு கூறியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
பின்பு குறித்த பெண்ணின், குழந்தையின் பள்ளி வங்கிக்கணக்கினை தருமாறு, அஜீத்தின் மேலாளர் கூறியநிலையில், அதற்கு பர்சானா தனது வங்கிக்கணக்கிற்கு அனுப்புமாறு கேட்டுள்ளார்.
இதற்கு மேலாளர் மறுத்ததால், அஜீத்தின் மேலாளரை அநாகரீகமாக பேசியதுடன், மோசடி செய்ததாக அவர் மீது புகாரும் கொடுத்துள்ளார்.
ஆனால் இதனை விசாரணைத்த பொலிசார், குறித்த பெண்ணின் புகார் உண்மையில்லை என்றும், குறித்த பெண்ணை எச்சரிக்கை செய்தும் அனுப்பியுள்ளதோடு வழக்கையும் முடித்து வைத்துள்ளனர்.
ஆனால் பர்சானா இதையெல்லாம் மறைத்து, சினிமா பிஆர்ஓ ஒருவருடன் சேர்ந்துகொண்டு, நடிகர் அஜீத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் மீடியாவில் பொய்யான தகவலை பரப்பிவிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
மாதம் ஒன்றிற்கு ஐந்து குடும்பங்களுக்கு சத்தமின்றி உதவி செய்யும் அஜீத்தின் பெயரை இவ்வாறு அவதூறு செய்ததால் தான் செய்த செய்த உதவி தனக்கு உபத்திரவாமிட்டவதாக அஜீத் கவலையில் இருப்பதாக மேலாளார் கூறியுள்ளார்.