விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யாவின் அடுத்த அதிரடி!!
நட்சத்திர தம்பதிகளாக வலம்வந்த தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர்.
இச்செய்தி அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வருகிற காதலர் தினத்தன்று “காதல் பாடல்” ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா.
இதற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா, 25ம் தேதி முதல் 27ம் தேதி படப்பிடிப்புகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளாராம்.
விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர், தன்னுடைய வேலைகளில் ஐஸ்வர்யா கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும், அதற்கான முன்னோட்டமாக இந்த பாடல் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.