மகனுக்கு திருமணம் முடிந்த கையுடன் எனக்கு திருமணம் தான் - பார்த்திபன்
24 ஆண்டுகாலம் தனிமையில் இருந்த நடிகர் பார்த்திபன் தற்போது புதிய துணை ஒன்று வேண்டும் என பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் பார்த்திபன்
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பட்டி கொடுத்துள்ளார். தற்போது அது மக்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.
நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் 1990-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். காரணம் தெரியவில்லை ஆனால் 2001-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பார்தீபனடம் இருந்து விவாகரத்து பெற்ற சீதா 2010-ல் சதீஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு தற்போது தம்பதிகளாக வாழ்கின்றனர். ஆனால், பார்த்திபன் கடந்த 24 ஆண்டுகளாகத் தனிமையிலேயே வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது பார்த்திபன் தனது தனிமை மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசியுள்ளார். அவர்கள் மகள்கள் இருவரும் திருமணம் முடித்து விட்டனர்.
தற்போது தனது மகன் ராதாகிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான வேலைகளில் பார்திபன் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில், மகன் திருமணத்திற்குப் பிறகு அவன் தனது வாழ்க்கையைத் தொடங்கிவிடுவான்.

அதன் பிறகு வீட்டில் நான் முற்றிலும் தனிமையாகிவிடுவேன். அப்போது எனக்கென ஒரு துணை தேவை என்பதை உணர்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு வரப்போகும் துணை வெறும் மனைவியாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த புரிதலுள்ள தோழியாக இருக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பது அவசியம் என்பதை அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |