ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்.. உலக சாதனைப் படைத்த பெண்
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல்(37) என்ற பெண்ணிற்கு ஏற்கனவே இரட்டைக் குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 7ம் திகதி பிரசவ வலி ஏற்படவே, பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் 7 ஆண்குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்துள்ளன. குறித்த 10 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு முன்பு மாலி நாட்டைச் சேர்ந்த ஹலிமா சிசி(25) என்ற இளம்பெண், கடந்த மே மாதத்தில் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தார். இதுவே உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது அதனை முறியடித்து கோஷயாமி 10 குழந்தைகளைப் பெற்று உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.