எதிர்கட்சி தலைவர் யார் தெரியுமா? மோதலுக்கு பின்பு எடுக்கப்பட்ட முடிவு
தமிழகத்தில் எதிர்கட்சி தலைவராக எடப்படியும், துணை தலைவராக ஓபிஎஸ்-ம் இருக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட உள்ளது. அமைச்சருக்கு நிகரான எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவியது.
எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் யார் என முடிவு செய்யப்படாமலே திங்கட்கிழமைக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்றுள்ளது.
அ.இ.அ.தி.மு.கவின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான எம்.எல்.ஏக்கள் கூட்டம் சற்று முன்பு நிறைவடைந்துள்ளது.
இதில், திடீர் திருப்பமாக முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்கட்சி தலைவராக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியுள்ள நிலையில், எடப்பாடி எதிர்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க விருப்பமில்லாமல் போட்டி நிகழ்ந்தது.
இந்நிலையில் இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டம் தற்போது முடிவு பெற்றுள்ளதாகவும், இதில் எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை எதிர்கட்சி தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.