தீயாய் பரவும் சித்ராவின் காணொளி... கடந்த வருடத்தில் அன்னையர் தினத்தில் என்ன செய்திருக்கிறார்னு பாருங்க
மறைந்த சித்ராவின் பழைய காணொளி ஒன்றினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடித்த சித்த கடந்த ஆண்டு இறுதியில் பிரபல ஹொட்டல் ஒன்றில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
இவரது இறப்பிற்கு கணவருடன் ஏற்பட்ட தகராறு தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வரை உண்மையான காரணம் தெரியவில்லை.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை கைது செய்த பொலிசார் பின்பு ஜாமீனில் விடுவித்தனர்.
சின்னத்திரையில் தனது சிறந்த நடிப்பினாலும் குறும்புத்தனத்தினாலும் ரசிகர்களைக் கவர்ந்த இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியதுடன், தற்போது இவரது நினைவாக காணொளி மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த வருடன் அன்னையர் தினத்தன்று சித்ரா கோவிலுக்கு சென்று அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவும் ஒரு ஸ்பெஷல் பூஜை செய்திருந்தார். அந்த வீடியோவை இந்த வருடம் அன்னையர் தினத்துக்காக சித்ராவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர்.