கோமாவிற்கு சென்றாரா பிரபல நடிகர்? நடிகை ராதிகா பரபரப்பு ட்விட்
சீரியல் நடிகர் வேணு அரவிந்த் குறித்து நடிகை ராதிகா பரபரப்பான ட்விட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை தொடர்கள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'காதல் பகடை' என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.
சீரியல் தவிர சில படங்களிலும் நடித்துடன், ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்து ரசிகர்களின் நல்ல வரவேற்பினை பெற்றார்.
சீரியல் நடிகர் வேணு அரவிந்த் கோமாவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியதையடுத்து, இது தவறான செய்தி என்று ராதிகா கூறியுள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் "பல ஊடகங்கள் வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாக செய்தி வெளியிட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. நானும் அவரது மனைவியும் அவரது உடல்நிலையை நெருக்கமாக கவனித்து வருகிறோம்.
அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தார், ஆனால் தற்போது உடல்நிலை சீராக உள்ளது மிகவும் சிறந்த மனிதர். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். போலியான செய்திகளை வெளியிடுவதை நிறுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்
It’s very sad that the media falsely say that #VenuArvind is in a coma, have been closely following his health with his wife, he was not well, now he is stabilised, a wonderful person, please pray he comes home soon ,sound and healthy.Stop wrong news pic.twitter.com/eWgKKCBzBR
— Radikaa Sarathkumar (@realradikaa) July 29, 2021
இந்நிலையில் வேனுவுடன் வாணி ராணி சீரியலில் நடித்த அருண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் வேனு சாரின் மனைவியிடம் பேசினேன். அவர் கோமாவில் சாரின் கடந்த 8 மாதங்களாக அவருக்கு சில உடல் நல பிரச்சனைகள் இருந்தது. அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார்.
தற்போது அவர் ICUவில் தான் இருக்கிறார். ஆனால், கோமாவில் இல்லை. விரைவில் அவர் நலமுடன் வீடு திரும்புவார். அதுவரை எந்த ஒரு வதந்தியும் பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.
#VaniRani Actor #Arun About #VenuArvind Condition.... pic.twitter.com/DzVLG3ErJR
— chettyrajubhai (@chettyrajubhai) July 30, 2021