அடித்து கொடுமை செய்த இரண்டாவது கணவர்.. தற்போது மனம் மாறிய நடிகை ராதா செய்த செயல்!
தமிழ் சினிமாவில் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை ராதா (39).
இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து விட்டு சென்னை சாலிகிராமம் பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தார்.
இதனைத்தொடர்ந்து, நடிகை ராதாவுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் கொண்ட எண்ணூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக வசந்தராஜா சாலிகிராமத்தில் நடிகை ராதாவுடன் வாழ்ந்து வந்தார்.
இதனிடையே, வசந்தராஜாவுக்கும் நடிகை ராதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.
மேலும், நடிகை ராதாவை உதவி ஆய்வாளர் வசந்தராஜா அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், நேற்று தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகக் கூறி நடிகை ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தற்போது கணவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டதால் அந்த புகாரை நடிகை ராதா வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.