இலங்கை தொழிலதிபருடன் வெளிநாட்டில் செட்டிலான ரம்பா! நேரில் சென்று பார்த்த குஷ்பு - லீக்கான புகைப்படம்
நடிகை குஷ்பு தனது மகள்களுடன் நடிகை ரம்பா வீட்டிற்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஷ்புவும் ரம்பாவும் விஜய்யின் மின்சார கண்ணா படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
குஷ்புவுக்கு பிஏவாகவும் படத்தில் செகண்ட் ஹீரோயினாகவும் நடித்திருந்தார் ரம்பா.
குஷ்புவும் ரம்பாவும் சீனியர் ஜூனியர் என்றாலும் அவர்களுக்கு இடையே நல்ல நட்பு உள்ளது. ரம்பா இலங்கை தொழிலதிபரை திருமணம் செய்த பிறகு வெளிநாட்டில் செட்டிலானார்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது மகள்கள் இருவருடனும் நடிகை ரம்பாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இருவரும் தங்களது குழந்தைகளுடன நேரத்தை செலவழித்துள்ளனர்.
மேலும் இரவு ஒன்றாக டின்னர் சாப்பிட்டுள்ளனர்.
அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள குஷ்பு, பழைய நண்பர்களை சந்திப்பதைவிட சிறந்த தருணம் இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.