காதல் கணவருடன் கீர்த்தி சுரேஷின் பொங்கல் கொண்டாட்டத்தை பாருங்க... வைரல் புகைப்படங்கள்
காதல் கணவருடன் செம ரொமான்டிக்காக பொங்கல் பண்டிகையை கொண்டாடி நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் திருமணத்துக்கு பின்னரும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் கீர்த்தி சுரேஷ்.

இது என்ன மாயம் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ரீ கொடுத்த இவர், அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், பைரவா, சர்க்கார், ரெமோ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’)என்ற படத்துக்காக கீர்த்தி சுரேஷூ தேசிய விருதையும் வென்றார்.

பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இவருடன் திரையை பகிர்ந்துக்கொள்ள பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது, கடந்த வருடம் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை கீர்த்தி திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்தின் பின்னரும் அதே ஈடுபாட்டுடன் சினிமாவில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷிற்கென தனி ரசிகர் படையே இருக்கின்றது.
இந்நிலையில், தனது காதல் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் அசத்தலாக பொங்கல் கொண்டாடி கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படங்களும் காணொளிகளும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |