42 வயதாகியும் திருமணம் ஆகாமல் பிரபல நடிகை! அதிரடியாக சீரியலில் எண்ட்ரி
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கி வந்த நடிகை கௌசல்யா தற்போது பிரபல சீரியலில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்துள்ளார்.
நடிகை கௌசல்யா
தமிழில் சினிமாவில் 90ல் கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கௌசல்யா. விஜய், கார்த்தி, பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.
இவரின் முதல் படம் மலையாளமாக இருந்தாலும், இவரை பிரபலமாக்கியது தமிழ் சினிமாவே. இவர் 'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தில் 'கௌசல்யா' என்கிற பெயரில் அறிமுகமான நிலையில், இப்படம் பயங்கர வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, கவிதா என்கிற தன்னுடைய பெயரை கௌசல்யா என்றே மாற்றிக்கொண்டார்.
தற்போது மலையாள படங்களில் நடித்து வரும் இவர், 42 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்து வருகின்றார்.
சீரியலில் எண்ட்ரி
தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் நடிகை கௌசல்யா அதிரடியாக எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சீரியலில் நடிகை கேப்ரில்லா கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
கிராமத்தில் பிறந்து கலெக்டர் கனவுடன் இருக்கும் சுந்தரி, பல போராட்டங்களை அடுத்தடுத்து சந்தித்து வருகின்றார். இந்நிலையில் கலெக்டர் பயிற்சிக்கு வந்த இடத்தில், நடிகை கௌசல்யா பயிற்சியாளராக எண்ட்ரி கொடுத்துள்ளார்.