திருமணத்திற்கு பின் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராதா மகள்.. வைரலாகும் புகைப்படம்
திருமணத்திற்கு பின் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராதா மகள் கார்த்திகாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ராதாவின் சினிமா பயணம்
தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் சிகரம் பாரதி ராஜா இயக்கிய “அலைகள் ஓய்வதில்லை ” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ராதா.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ராதாவிற்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாக்களிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
90களில் இருந்த டாப் நடிகர்களில் ஒருவராக ராதா பார்க்கப்பட்டார். இவரின் சகோதரி அம்பிகாவும் டாப் நடிகையாக இருந்தவர் தான். தற்போது பிரபல தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆளே மாறிப்போன புகைப்படங்கள்
இந்த நிலையில் ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவிற்கு பிரமிக்கும் அளவுக்கு திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
திருமணத்திற்கு பின்னரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கார்த்திகா கணவருடன் டூர் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களில் பார்க்கும் பொழுது முன்பு இருந்ததை விட இன்னும் அழகாகியது போன்று தெரிகிறது.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், நலம் விசாரித்து வருகிறார்கள்.
வாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |