பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன? உண்மையை உடைத்த பிரபல நடிகை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து நடிகை தீபிகா வெளியேறியது ஏன் என்ற காரணத்தினை தற்போது வெளியிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில், தற்போது மிகவும் கண்ணீருடன் கதை சென்று கொண்டிருக்கின்றது.
ஆம் இந்த வாரம் மூர்த்தி பிரதர்ஸின் அம்மா லட்சுமி காலமானதால் மொத்த குடும்பமும் கண்ணீரில் ஆழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி மேலும் ஒரு அதிர்ச்சியாக ஐஸ்வர்யாவாக நடித்துவந்த விஜே தீபிகா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நடிகை சாய் காயத்ரி ஐஸ்வர்யா ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில் தீபிகா கூறுகையில், தான் அந்த சீரியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் தனது முகத்தில் ஏற்பட்ட பருக்கள் தான் காரணம். ஆனால் பிரபல ரிவி தனக்கு 3 மாதம் அவகாசம் கொடுத்தும், தன்னால் இந்த பருக்களை சரி செய்ய முடியவில்லை.
ஆரம்பத்தில் மருத்துவர்கள் மேக்கப்பினால் ஏற்படும் அலர்ஜி என்றே கூறிய நிலையில், தற்போது வெளிப்படையான பிரச்சினை இல்லை என்றும் உடலுக்குள் பிரச்சினை இருக்கின்றது என்பது தெரியவந்துள்ளது.
ஆதலால் இதற்காக சிகிச்சை மேற்கொண்டிருக்கிறேன். கண்ணனுக்கும், தனக்கும் காதல் என்று யாரும் எண்ண வேண்டாம். நாங்கள் இருவரும் நலல நண்பர்கள் என்று கூறியுள்ளார்.
தாங்கள் இருவரும் தனிப்பட்டு ஆரம்பித்த சேனலுக்கும், தான் சீரியலிலிருந்து நிறுத்தப்பட்டற்கும் எந்தவொரு காரணமும் இல்லை என்று கூறியுள்ளார்.