பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலமான நடிகையாக வலம் வரும் துணை நடிகை தீபாவின் தந்தை டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தீபா
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபா. இவருடைய வெகுளித்தனமான பேச்சுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

சின்னத்திரையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த இவர், தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம், மண்டேலா, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் இவரின் நப்புக்கு வெள்ளித்திரையிலும் பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.
தந்தைக்கு அரிவால் வெட்டு
இவரது தந்தை புலவர் கணேசன் (வயது 70). இவர் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பஜாரில் உள்ள டீக்கடை அருகே நின்றிருந்தபோது, முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதில் புலவர் கணேசன் பலத்த காயமடைந்த நிலையில், இதைப் பார்த்ததும் அருகில் இருந்த ஒருவர் தடுக்க முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் அவரையும் வெட்டியதில், அவரது கையிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பலத்த காயத்துக்கு உள்ளாகன அவர்களை உடனடியாக அங்கிருந்து பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |