கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பட்டு புடவையில் தங்க சிலை போல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது மீடியா பயணத்தை ஆரம்பித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட ரியாலிட்டி நிகழ்சியில் கலந்துக்கொண்டு மக்களின் அமோக வரவேற்பை பெற்றார்.
தெனை தொடர்ந்து தரமான கதைகளாக தேர்வு செய்து படங்கள் நடித்து மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றார். அவர்களும் இவர்களும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அட்டகத்தி படத்தில் அமுதா கதாபாத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக நடித்தார். இந்த திரைப்படம் தேசிய விருத பெற்றது. பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து டாப் நாயகிகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.
சினிமாவில் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாப்பாத்திரங்களையே தெரிவு செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமான கிளாமர் கதாப்பாத்திரங்களின் மீதும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
இந்நிலையில் தற்போது அழகிய பட்டு சேலையில் கொள்ளை அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்து, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |