மலடி பட்டம் கொடுத்த கணவர்: விவாகரத்து பின் பிறந்த மகள் - ரேவதியின் கண்ணீர் கதை
நடிகை ரேவதி தன்னுடைய காதல் கணவரை திருமணம் செய்தும் தற்போது தனியான வாழ்க்கைக்கு பின் ஒரு கண்ணீர் கதை உள்ளது.
நடிகை ரேவதி
நடிகைகள் திருமணம் செய்தால் அவர்களது வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் என நினைத்திருப்போம். ஆனால் சாதாரண மக்கள் போலவே அவர்களது வாழ்க்கையிலும் பிரச்சனை இருக்கிறது.
குறிப்பாக நடிகை ரேவதி 80ஸ்களின் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். அவரின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பவர்களை ஈர்க்கும் அந்த அளவிற்கு நடிகை ரேவதியின் நடிப்பு மிகவும் துல்லியமாகவும் ரசிகக் தகுந்ந வகையிலும் இருக்கும்.

இப்போது நடிகை ரேவதிக்கு 59 வயதாகிறது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் நடித்து பன்மொழி நட்சத்திரமாக மக்கள் மத்தியில் பிரபலமானர்.
இவர் கதாநாயகியாக அறிமுகமானது 17 வயதில்.முதல் படத்திலேயே பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
மூன்று தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இவர் ஒரு நடிகை மட்டுமல்ல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராவார்.

ரேவதி திருமணம்
நடிகை ரேவதி 1986-ல் ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திர மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது அவர் திரையுலகில் உச்சத்தில் இருந்தார். பின்னர் இருவரும் சேர்ந்த பல திரைப்படங்களில் பணியாற்றி இருந்தனர்.
ரேவதி கணவன் மேல் நம்பிக்கை வைத்து இரண்டு படங்களை தயாரித்தார். இந்த இரண்டு படங்களையும் சுரேஷ் இயற்றி இரந்தார். இதில் ஒரு படம் நல்ல வெற்றியை கொடுத்தது.
ஆனால் இன்னுமொரு படம் நஷ்டத்தை கொடுத்தது. இதனால் ரேவதி மற்றும் அவரது கணவருக்கு பணத்திற்கு பஞ்சம் வந்தது. இதனால் ரேவதியின் கணவர் குழந்தை வந்தால் அதற்கு பணம் இல்லை என நினைத்து தனக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதன் பின்னர் வீட்டில் எல்லோரும் குழந்தை இல்லையா என்ன பிரச்சனை என கேட்க அதற்கு ரேவதியின் கணவர் ரேவதிக்கு மலடி பட்டம் கொடுத்துள்ளார்.
ரேவதி உண்மையில் நம்மீது தான் பிரச்சனை என நினைத்து கவலைபட்டுள்ளார். ஆனால் உண்மை தெரிய வந்தததும் தன்னை மற்றவர்களிடம் மலடி என்று பட்டம் குத்திய கணவரை மன்னிக்க முடியாமல் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

இவர்கள் மொத்தம் 16 வருடங்கள் சேர்ந்து இருந்து விட்டு பிரிந்துள்ளனர். விவாகரத்துக்கு சில வருடங்களுக்குப் பிறகு, நடிகை ரேவதி IVF சிகிச்சை மூலம் 48 வயதில் தாயானார்.
தன் மகளால் தன் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்துள்ளது என்று கூறும் ரேவதி, மகள் சற்று வளர்ந்ததும் எல்லா விஷயங்களையும் சொல்வதாகக் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |