நடிகர் விவேக் திடீரென மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி! தீவிர சிகிச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 8000-ஐ நெருங்கி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 45 வயதை கடந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்பதை எடுத்து கூறும் விதமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இருந்தாலும் பலர், தடுப்பூசி போட்டு கொள்ள அச்சப்படுகின்றனர். நேற்று தமிழகத்தில் துவங்கப்பட்ட தடுப்பூசி திருவிழாவில் 75 ,௦௦௦ பேர் மட்டுமே முன்வந்து தடுப்பூசி போட்டு கொண்டனர்.
இந்த நிலையில், மக்கள் மத்தியில் உள்ள கொரோனா தடுப்பூசியின் அச்சத்தை போக்கும் விதமாக, நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.
அதன்பின்னர் பேசிய அவர், தமிழக அரசு கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே கண்டிப்பாக அனைவரும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும், மக்களின் உயிரை காக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வேதே சிறந்தது எனவும், முககவசம் கட்டாயம் அணியம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, தற்போது நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரணம், திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த நிலையில், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
அவரது, உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இவர் நேற்று தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு விழிப்புணர்வு செய்து வந்தார்.