நடிகர் விவேக்கிற்கு அளிக்கப்பட்ட ”எக்மோ” சிகிச்சை என்றால் என்ன? எதற்காக அளிக்கப்படுகிறது?
மாரடைப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் விவேக் நெஞ்சு வலி காரணமாக நேற்று காலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அதில் எந்தவொரு முன்னேற்றம் ஏற்படாததால், இதயம், நுரையீரல் இயங்குவதற்கு தற்போது எக்மோ(Extracorporeal membrane oxygenation) சிகிச்சை அளிக்கப்பட்டது.
சின்னக் கலைவாணர்
— வைரமுத்து (@Vairamuthu) April 16, 2021
தம்பி விவேக்
விரைந்து நலமுற்று மீள வேண்டும்;
மனிதர்களின்
மாரடைப்பைத் தடுக்கின்ற
நகைச்சுவைக் கலைப்பணியை
வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும்.
வாழ்த்துகிறேன்.@Actor_Vivek
எக்மோ சிகிச்சை என்றால் என்ன?
’Extracorporeal membrane oxygenation’ என்பதன் சுருக்கமே எக்மோ ஒருவரின் நுரையீரல் அல்லது இதயம் செயலிழந்த பிறகு இதன் செயல்பாடுகளை வெளியில் இருந்து செய்யும் கருவியே எக்மோ ஆகும்.
காற்றில் உள்ள ஆக்சிஜனை பிரித்து ரத்தத்தில் ஏற்றுவதே மனித நுரையீரலின் செயல்பாடு. அதே போன்று ஆக்சிஜன் ஏற்றிய ரத்தத்தை உடல் முழுவதும் கொண்டு செல்வதே இதயத்தின் செயல்பாடு.
ஆனால், பல்வேறு காரணங்களால் நுரையீரல், இதயம் செயலிழக்கும் பட்டத்தில் இது நடைபெறாமல் போனால் உடலில் கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் @Actor_Vivek அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) April 16, 2021
கொரோனா வைரசானது மனித உடலில் புகுந்த உடன் ரத்தத்தில் கட்டித்தன்மையை அதிகரித்து நுரையீரலையும் இதயத்தையும் பாதிப்பை ஏற்படுத்துக்கின்றது.
இதனால் உடல் உறுப்புகளுக்கு நல்ல ரத்தம் செல்லாமல் ஹேப்பாக்சியா நிலை ஏற்படுகின்றது. அது போன்ற நேரங்களில் நுரையீரல் மற்றும் இதயத்தின் செயல்பாடுகளை செய்ய எக்மோ கருவி பொருத்தப்படும்.
உடலில் உள்ள கார்பன்டை ஆக்சைடு உள்ள ரத்தத்தை எடுத்து ஆக்சிஜன் ஏற்றிய ரத்ததை உடலில் ஏற்றும் இந்த நடைமுறையை நுரையீரலை இதயத்தை மீட்டுக் கொண்டு வரும் வரை பயன்படுத்த முடியும்; ஆனாலும் இந்த சில நாட்கள் ஒரு மாதம் வரை தான் வைத்திருக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.