இலங்கை தமிழரின் பிள்ளைகளுக்காக விவேக் தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்! உருகும் குடும்பத்தினர்
மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பம் இன்னும் சோகத்தில் மீளாமல் இருக்கும் நிலையில், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விவேக் கடந்த 17ம் திகதி மாரடைப்பினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது நினைவிலிருந்து இன்னும் மீளாமல் இருந்த வருகின்றனர்.
விவேக் தான் நடித்த அத்தனை படங்களிலும் மக்களுக்கும், சமூகத்திற்கும் தேவையான கருத்தினை மிகவும் துணிச்சலாக மக்களிடம் கொண்டு சென்றார்.
இவர் மட்டுமின்றி இவரது தந்தை சிவ அங்கய்யா பாண்டியனும் சமூக நலனில் அதிக அக்கறை கொண்டவராகவும், தனது வாழ்நாளில் இறுதிவரை சமூகப்பணிகளை செய்தும் வந்துள்ளார்.
குறிப்பாக விவேக்கின் தந்தை சி அங்கய்யா இலங்கை தமிழர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவர். இவர் ராமநாதபுரத்தில் ஆசிரியராக வேலை செய்த போது மண்டபத்திலுள்ள அகதிகள் முகாமிற்கு சென்று அங்கு இலங்கை தமிழ் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தனது ஓய்வுக்கு பின்பு மகன் விவேக் வீட்டில் வசித்து வந்த அவர் 2014ம் ஆண்டு தனது 80 வயதில், தூக்கத்திலேயே உயிரிழந்தார். படங்களில் தந்தைக்கு தொல்லை கொடுக்கும் மகனாக இருந்த விவேக் நிஜத்தில் தந்தையின் கால்தடத்தில் வளர்ந்து அவருக்கு நிகராக சமூகப்பணிகளில் ஈடுபட்டு மக்களின் உள்ளத்தில் தற்போது வரை குடிகொண்டுள்ளார்.
தந்தையை மறைந்த சோகத்தில் இருந்த விவேக்கிற்கு அடுத்த அடியாக 2015ம் ஆண்டு அவரது மகன் பிரசன்னகுமார் 13 வயதில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தது மற்றொரு பேரதிர்ச்சியினைக் கொடுத்தது.
அடுத்தடுத்த இரண்டு பிரிவுகளில் இருந்து மீள முடியாத விவேக் மனதிற்குள் சோகத்தினை அடக்கிக்கொண்டு வெளியில் சிரித்து கொண்டு, மக்களுக்கு நல்லது செய்து வந்தார். இவரும் சமீபத்தில் அப்பாவைப் போன்று திடீரென இறந்துள்ளது அவரது குடும்பத்தினை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.
ஆம் 6 வருடங்களில் தொடர்ந்து 3 உறவுகளை பறிகொடுத்த அவரது குடும்பம் மனைவி மற்றும் பிள்ளைகள் தற்போதும் சோகத்தில் காணப்படுகின்றனர். இவர்களை உறவினர்கள் நண்பர்கள் என ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.
உலகில் பல நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையும் துயரம் நிறைந்ததாக இருக்கும் என்று சொல்வார்கள். அதற்கு , நடிகர் விவேக்கும் விதிவிலக்கல்ல என்று காலம் மீண்டும் ஒரு முறை உணர்த்தி விட்டது.