நடிகர் விஜய்யின் கார் விவகாரம்- கோரிக்கை ஏற்ற நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இங்கிலாந்தில் கடந்த 2012-ம் ஆண்டு இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்துள்ளார்.
இந்தக் காருக்கான அனுமதிக்கப்பட்ட வரிகளை செலுத்தியிருந்தார். ஆனால், தமிழ்நாடு அரசு விதிக்கும் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டார்.
இதன்பின்னர், இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்த்தும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று, வழக்கின் தீர்ப்பு நகலின்றி பட்டியலிட உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்ததுள்ளது.