சந்தானம் வீட்டில் விஷேசம்.. ஆர்யாவால் நிறைவேறிய ஆசை- எங்கு நடக்கிறது தெரியுமா?
நடிகர் சந்தானம் தற்போது புதிய வீடு கட்டி குடியேறிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சந்தானம்
காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது கதாநாயகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம்.
இவர், நடிப்பில் கடைசியாக டிடி நெக்ஸ்ட் திரைப்படம் வெளியானது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் கால் பதித்து பிரபலங்களில் இவரும் ஒருவர்.
சின்னத்திரையில் இவரது டைமிங் காமெடியை பார்த்து, அசந்து போன சிம்பு தான் சந்தானத்துக்கு அவருடைய படத்தில் நண்பனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இந்த திரைப்பட வெற்றிக்கு பின்னர், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கு வாய்ப்பு வந்தன.
கடன் பிரச்சினை அதிகரிப்பு
இந்த நிலையில், தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் சந்தானம் புதிய வீடு ஒன்றை சென்னையில் பிரமாண்டமாக கட்டியுள்ளார்.
டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் கமிட்டான வேளையில் சந்தானம் அதிகமான கடன் பிரச்சினையில் சிக்கியிருந்தார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. சென்னையில், சந்தானம் பழைய வீடு ஒன்றை வாங்கி அதை கொஞ்சம் ரெனவேட் செய்ய நினைத்த நிலையில் ஆர்யா “அதெல்லாம் செட் ஆகாது..” என கூறி அந்த பழைய வீட்டை முழுவதுமாக இடிக்க செய்து புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்.
புதிய வீடு கட்டினாரா?
இன்றைய தினம் புதிய வீட்டின் கிரஹப்ரவேசம் சிறப்பாக முடிந்துள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும், புதிய வீட்டில் குடியேறியுள்ள சந்தானத்திற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |