கணவரால் கைவிடப்பட்ட ஆர்த்தி அப்பாவுக்கு எழுதிய கடிதம்
நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை பற்றி வெளியிட்ட பதிவு இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
விவாகரத்து சர்ச்சை
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தவர் தான் ரவிமோகன்.
இவர், கடந்த சில மாதங்களாக விவாரத்து சர்ச்சையில் பலத்த அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய காதல் மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக வெளியிட்ட அறிக்கையே இவற்றிற்கு எல்லாம் பிள்ளையார் சுழியாக அமைந்தது.
இதற்கிடையில், நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி, தனது இன்ஸ்டாகிராமில் தனது தந்தை கிருஷ்ணமூர்த்தி விஜயகுமாருக்கு தந்தையர் தினத்தை முன்னிட்டு ஒரு இனிமையான பதிவை பகிர்ந்துள்ளார்.
நான் மீண்டும் வருவேன், நம்பிக்கை உள்ளது
அதில், என்னுடைய தந்தை எப்படியான சூழ்நிலைகளிலும் தனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். நிபந்தனைகள் இல்லாமல் அன்பு செலுத்த என்னுடைய குழந்தைகளும் கற்றுக் கொள்கின்றனர்.
அப்பா, நான் ஒரு காலத்தில் அலட்சியமாக எடுத்துக்கொண்டதை இப்போது உணர்கிறேன். எந்த சத்தமும் இல்லை, புகழும் இல்லை - நீங்கள் மட்டுமே இருந்தீர்கள். குழந்தைகளும் உங்களை பிரதிபலிக்கிறார்கள். நீங்கள் என்னை மட்டும் வளர்க்கவில்லை, அவர்களையும் சேர்த்து வளர்க்கிறீர்கள்.
ஒரு காலத்தில் நம்பிக்கையுடன் நீங்கள் போகவிட்ட அதே பெண் நான் இல்லை என்று எனக்குத் தெரியும். வாழ்க்கை நம்மில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் என்னை சோதித்துள்ளது. மீண்டும் அவளைத் திரும்பப் பெற விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும் - அவள் இருந்ததைப் போலவே. நான் முயற்சி செய்கிறேன். நான் அவளை மீண்டும் கண்டுபிடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நான் உங்கள் சிறிய பெண்ணாகத் திரும்பி வருவேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
கெனிஷா பார்த்த வேலை
ஆர்த்தி ரவியும், ரவி மோகனும் சமூக ஊடகங்களில் அவர்களின் தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதனை சென்னை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்த பின்னர் இருவரும் நீக்கி விட்டனர்.
இப்படியொரு நிலையில், கெனிஷா தன்னுடைய நண்பர் என சொல்லப்படும் ரவிமோகனுடன் இணைந்து ஆல்பம் பாடலொன்றை வெளியிட்டு, மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |